‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
'என்னை வாழ வைக்கும் தெய்வங்களே' என்று நீங்கள் உருகும் கோடிக்கணக்கான தெய்வங்களில் நானும் ஒருவன். 'லிங்கா' ஒலிநாடா வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசிய பேச்சு, இதுவரை பலமுறை விரும்பியும் எழுதாத ஒரு கடிதத்தை, உடனடியாய் என்னை எழுத வைத்து விட்டது. ''அரசியலுக்கு வர பயப்படவில்லை; ஆனால் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது'' என, அன்று நீங்கள் சொன்னதை பலவாறு யோசித்துப் பார்த்துவிட்டேன். ஆனால், 'நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?' என்று சத்தியமாக புரியவில்லை!
'பாட்ஷா' படம் வெளிவந்த சமயத்தில், எங்களுக்குள் அரசியல் ஆசையை நீங்கள்தான் விதைத்தீர்கள். அந்த ஆண்டில் பிறந்த குழந்தைகள் கூட, தற்போது ஓட்டுப் போடும் வயதிற்கு வந்துவிட்டனர். ஆனால், தங்களின் நிலைப்பாடு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது.
''உங்கள் தலைவர், தன்னை பாதுகாத்துக் கொள்ள உங்களை அவ்வப்போது பணயம் வைத்து விடுகிறார்'' என்கிற கிண்டல்களும், விமர்சனங்களும் இப்போது உச்சத்தை எட்டி விட்டன. ''அரசியலின் ஆழம் தெரியும்'' எனச் சொன்ன உங்களுக்கு, இதுபோன்ற வார்த்தைகள், எங்களுக்குத் தரும் வலிகளின் ஆழம் தெரியவில்லையா தலைவா?
''எனக்கு எப்போது, எது தர வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும்'' என்கிறீர்கள். ஆனால், கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, உங்களை நோக்கி அரசியல் வாய்ப்புகளை வரமாக அளிப்பது, கடவுளைத் தவிர வேறு யாராக இருக்க முடியம்?
''நான் சூழ்நிலையின் பொருள்'' என்கிறீர்களே! 'அலைகளின் ஆர்ப்பரிப்பு அடங்கும் வரை கடலை வேடிக்கைப் பார்த்த எந்த மீனவனும், மீன் பிடித்ததாக வரலாறு கிடையாது' என்பது தங்களுக்கு தெரியாததா!
கடைசியாக ஒன்று. கடவுளும் தெளிவாக இருக்கிறார். நாங்களும் தெளிவடைந்து விட்டோம். இனிமேலும் வேண்டாம் தலைவா... இந்த அரசியல் கண்ணாமூச்சி!
அன்புடன்,
குமார், இராஜபாளையம்.