பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
தமிழ்த்திரையுலகின் முன்னோடிகளில் முக்கியமானவராக கருதப்படும் எல்லீஸ்.ஆர்.டங்கன் பற்றி சுவையான 80 நிமிட படத்தை, கரன் பாலி எடுத்திருக்கிறார். டங்கனுக்கு செலுத்தப்படும் முதல் மற்றும் முழுமையான பாராட்டு. இவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களில் எம்.எஸ்., எம்.ஜி.ஆர். டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா அடங்குவர். தெற்கு கலிபோர்னியா பல்கலை.யில், திரைப்படக் கலையை பயின்ற எல்லீஸ்.ஆர்.டங்கன், தன்னுடன் படித்த எம்.எல்.டாண்டன் என்ற இந்திய மாணவரின் அழைப்பை ஏற்று, இந்தியா பின்னணியில், ஆங்கில படங்கள் தயாரிக்க சென்னைக்கு வந்த டங்கன், 1936ல், சதிலீலாவதி என்ற படத்தை இயக்குகிறார். அதில் தான் எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலைய்யா அறிமுகம் செய்யப்படுகிறார்கள்.1937ல் அம்பிகாபதி, 1945ல் மீரா, (எம்.எஸ்.சுப்புலெட்சுமி, மீராவாக நடித்து பாடியது) சகுந்தலா, 1943-ல் சென்னை தேவி பிலிம்ஸ் தயாரித்த தாசி மகன்(இதில் எம்.ஜி.ஆர். சிவ தாண்டவம் ஆடியிருக்கிறார்), 1949ல் பொன்முடி, 1950ல் மந்திரிகுமாரி (கலைஞர் கதை, வசனம்), கே.பி.சுந்தராம்பாள் நடித்த பக்த நந்தனார் உள்பட தமிழில் 11, தெலுங்கு-1, இந்தி-1 படங்களை, டங்கன் இயக்கியுள்ளார். பல புதுமைகளை சினிமாவில் புகுத்தியவர். பொன்முடி, மந்திரி குமாரி இரண்டும் மாடர்ன் தியாட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் தயாரிப்பு.
தமிழ்மொழி தெரியாவிட்டாலும், உதவியாளர்களின் ஒத்துழைப்போடு மாபெரும் சாதனைகளை படைத்திருக்கிறார். ஆறு மாதங்கள் மட்டுமே, தமிழ்நாட்டில் இருக்க நினைத்தவர், பதினைந்து ஆண்டுகள் இருந்தார். இந்த படத்தை உருவாக்க கரன் பாலி, தியோடர் பாஸ்கரன், மோகன்ராம், மேக்கப் மேன் ஸி.எம்.முத்து ( என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையாவிற்கு டச் அப் பையனாக அப்போது பணிபுரிந்தவர்). மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் டி.ஆர்.சுந்தரம் பற்றி புத்தகங்கள் எழுதியிருக்கும் வி.வெங்கடசாமி, டி.வி.பாலகிருஷ்ணன் (எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றி) ராதா விஸ்வநாதன், பிரபல டாக்குமென்டரி தயாரிப்பாளர் டாக்டர் எஸ்.கிருஷ்ணஸ்வாமி போன்றவர்களை சந்தித்து, பேசி தகவல் பெற்றிருக்கிறார்.
டங்கன் பற்றிய ஒரு சிறு கட்டுரையை, 2004ல் படித்து வியந்து போய் இந்த முயற்சி 2012 ஜூலை முதல் நவம்பர் 2013 வரை இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
டங்கன் எல்லீஸ், 1950ல் அமெரிக்காவிற்கு திரும்பிய பின்னர் மேற்கு வர்ஜினியாவில், வீலிங் என்ற இடத்தில் வாழ்ந்து 2001 டிசம்பரில் இறந்து போனார். இந்த படத்தை, நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவில், முதலில் திரையிட்ட கரன் பாலி, வீலிங் ஊருக்கு சென்று, டங்கனின் நண்பர்கள் எழுபது பேர்களுக்கு படத்தை திரையிட்டுக் காட்டினார். டங்கன் 1958லிருந்து கடைசிவரை பல டாக்குமென்டரிகள், மருத்துவப் படங்கள் செய்தார், ஆனால், ஒரு திரைப்படமும எடுக்கவில்லை.
தமிழ்த்திரைப்படத்திற்கு மிகப்பெரிய சாதனை செய்த ஒரு முன்னோடியைப் பற்றி படம் எடுத்ததில், எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்கிறார் மும்பையில் வசிக்கும் பஞ்சாபிக்காரர் கரன் பாலி.
இந்தியாவை விட்டுப்போய், 43 ஆண்டுகள் கழித்து, டங்கன் இந்தியாவிற்கு திரும்பி வந்த போது, 1994ல் தமிழ்த் திரைப்படத்துறை அவருக்கு பாராட்டு விழா நடத்தி கெளரவித்தது.
மந்திரிகுமாரி படத்தில் முதலில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க டங்கன் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரமும், கதை, வசனம் எழுதிய கலைஞரும், எம்.ஜி.ஆர். தான் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதால், டங்கன் ஒப்புக்கொண்டார். எம்.ஜி.ஆரின் தாடையில் இருந்த சிறு பிளவு மறைக்க, எம்.ஜி.ஆருக்கு, சிறு தாடி வைக்கப்பட்டது.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்..