'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி, கமலைவிட பிசியாக இருக்கிறார் மில்க் கானா. இவர் பாடினாலோ, ஆடினாலோ படம் ஹிட்டுன்னு ஒரு சென்டிமெண்ட்டை யாரோ தட்டிவிட மில்க்கானா காட்டில் கன பண மழை. கைவசம் 100 படங்கள் என்கிறார்கள். பாட்டுக்கு பத்து லட்சம், பாடி ஆட 20 லட்சம், சில காட்சிகள் நடிக்க வேண்டியது இருந்தால் பேக்கேஜா 25 லட்சம் என்பதுதான் அவரின் மெனுகார்ட்.
அதையும் கொடுக்க தயாரா இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் வந்த படத்துக்கெல்லாம் அட்வான்ஸ் வாங்கி போட்டுவிட்டு இப்போது அதனை செய்து கொடுக்க முடியாமல் திணறுகிறாராம். ஒரு நாளைக்கு நான்கு பாட்டு எழுத வேண்டும், இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும் அல்லது ஆட வேண்டும் என்கிற நிலை இதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
இதனால் கால்ஷீட் சொதப்பல்கள் ஏராளமாகி நிறைய தயாரிப்பாளர்களுக்கு பண விரயம். பல படங்கள் இவருக்காக காத்திருக்கிறது. விஷயம் பஞ்சாயத்துக்கு போயி பெயர் பஞ்சராகுறதுக்குள்ள பலரிடம் வாங்கிய அட்வான்சை திரும்பிக் கொடுத்து ஜகா வாங்கிவிட திட்டமிட்டிருக்கிறாராம் மில்க் கானா. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சும்பாங்க. அது கானா விஷயத்துல சரியா இருக்கு என்கிறார்கள்.