ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமா அடுத்த இரண்டு மாதங்களில் இதுவரை பார்த்திருக்காத ஒரு வசூலைப் பெறப போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து மிக முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளிவரப் போவதே அதற்குக் காரணம். இதற்கு முன்னர், இப்படிப்பட்ட படங்கள் வந்திருக்க வாய்ப்பிருந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் கிடைத்த வசூலை விட தற்போது கிடைக்கப்போகும் வசூல் நிச்சயம் சாதனைக்குரியதாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி, ரஜினிகாந்த், சோனாக்ஷிசின்ஹா, அனுஷ்கா நடிக்க 'லிங்கா' படம் வெளிவர உள்ளது. அதன்பின், ஜனவரி 2015ல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள 'ஐ' படமும், அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கௌதம்மேனன் இயக்கியுள்ள 'என்னைஅறிந்தால்' படமும் வெளியாக உள்ளது. இந்தப்படங்களின் செலவு சுமாராக 300 கோடி ரூபாய் அளவில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மூன்று படங்களும் வசூலிக்கும் தொகைதான், தமிழ் சினிமாவை, அடுத்த வியாபார கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.