கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
புது வசந்தம், சேரன் பாண்டியன், வானமே எல்லை, சிகரம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆனந்தபாபு. பிரபல நடிகர் நாகேஷின் மகனான இவர், தனது தந்தையைப்போன்று காமெடியனாக இல்லாமல், ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கைதட்டலை அள்ளிக்கொண்டு வந்தார். அதோடு, புதுமையான முறையில் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனால் நடிக்க வந்து சில படங்களிலேயே ஆனந்த பாபுவுக்கென்று ஒரு கமர்சியல் வட்டம் உருவானது. இருப்பினும் சுமார் 25 படங்கள் வரை நடித்தவரை பின்னர் சினிமாவில் பார்க்க முடியவில்லை. முற்றிலும் சினிமாவில இருந்து விலகியிருந்து வந்தார்.
இந்த நிலையில், மீண்டும் அவர் சினிமாவில் எனட்ரி கொடுக்க தயாராகிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால, ரீ-என்ட்ரியில் அவர் முன்பு போன்று நடிகராக களமிறங்கவிலலையாம். இயக்குனர் அவதாரமெடுக்கிறாராம். அதற்காக இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப பல கதைகளை அவர் தயார் செய்து வைத்திருக்கிறாராம். கூடிய சீக்கிரமே அவர் இயக்கப்போகும் படம் பற்றிய தகomfகள் வெளியாக உள்ளதாம்.