சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
கோவா திரைப்பட விழாவின் துவக்க படமான தி பிரஸிடென்ட் திரைப்படத்தின் இயக்குனர் மோஸென் மக்மால்பாஃப் மீடியாவை சந்தித்து பேசினார்.
அவரது பேட்டியிலிருந்து
* இந்த விழாவில் நான் இயக்கிய எட்டுபடங்கள் திரையிடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது மனைவி மர்ஸி மெஷ்கினி இயக்கிய மற்றொரு படமும் இங்ககு திரையிடுகிறார்கள்.
* ஐ லவ் இந்தியா, எனக்கு ரொம்ப பிடிக்கும், கண் தெரியாதவர் பார்வை பெற்று பார்ப்பது போல சத்யஜித் ரேயின் பதர் பஞ்சாலி படத்தை பார்த்து விட்டுத் தான் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். மகாத்மா காந்தியும் அவரது கொள்கைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
* மனிதர்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். பூகோளமும், சரித்திரமும் தான் வித்தியாசம்.
* இந்தியாவில் ஆடியன்ஸ் திரைப்படங்களை ரசிக்கும் விதம் பாராட்டுக்குரியது. இந்திய மக்கள் சினிமாவை மிகவும் விரும்புகிறார்கள். ஹீரோக்கள் மெய்க்காப்பாளர்களுடன் பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
* இரானில் புரட்சியில் இளைஞராக சேர்ந்த மோஸென்னை, போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தியதற்காக ஐந்து வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு, இரண்டாயிரம் புத்தகங்களை ஜெயிலில் அவர் படித்தார். சினிமாவெல்லாம் பார்க்க கூடாது பார்த்தால் நரகத்திற்குத் தான் செல்லுவாய் என்று அவரது பாட்டி ஸ்ட்ரிக்டாக அவரை வளர்த்தார். சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாமலேயே மோஸென் தனது 22 வது வயதில் திரைப்படம் எடுக்க ஆரம்பித்தார். லாங் ஷாட் என்று பெயர் கூட, (அடிப்படையாக எதுவும் தெரியாமல்) காமிராமேனிடம், காமிராவை தூரத்தில் கொண்டு போய் வை என்று சொல்லுவேன்.
* வீடுகள் கிராமங்கள் சுத்தமாக இல்லை. கிராமங்களில் டாய்லெட் வசதி இல்லை என்பதை பார்க்கும் போது எனக்கு கோபம் வருகிறது. இந்திய பிரதமர், சுத்தத்திற்கும், கிராமங்களில் டாய்லெட் கட்டுவதற்கும் பெரிய அளவில் முயற்சி எடுத்து வருவது பற்றி மகிழ்ச்சி.
* நாங்கள் கொடுத்த சிறு விளம்பரத்தை பார்த்து ஆயிரக்கணக்கானவர்கள் எங்கள் ஆபீஸிக்கு வந்து எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டனர். அந்த நெரிசலில் ஒருவருக்கு கை எலும்பு உடைந்தது, ஒருவருக்கு பலத்த அடி. இது தான் சினிமாவின் பவர், சக்தி. எனது ஸலாம் சினிமா அப்படித்தான் உருவானது.
* மோஸென்னின் சில படங்கள் இரானில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் இவர் பிரான்ஸ் நாட்டில், பாரிஸில், தனது இரண்டாவது மனைவியுடன் வசிக்கிறார். இவரது மூன்று வாரிசுகளும், தங்களுடைய சொந்த முயற்சியில் படம் எடுக்கிறார்கள். கல்லூரியிலிருந்து வெளியேறி திரைப்படம் எடுக்க நான் சம்மதிக்க வேண்டும் என்பதற்காக பலமுறை எனது மகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தாள். இப்போது அவளும் சினிமாவில் இயக்குனராக இருக்கிறாள்.
* இருபது படங்களை இதுவரை இயக்கி இருக்கும் மோஸென், ஐம்பது சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
* எட்டு ஆண்டுகள் முன்பு ஆப்கானிஸ்தானில் அரண்மனைக்கு சென்றிருந்தபோது தான் தி பிரஸிடென்ட் படத்தின் கரு உருவானது. அந்த சர்வாதிகாரியுடன் ஒரு சிறு பேரன் காரெக்டரை அறிமுகப்படுத்த எனக்கு ஐடியா கொடுத்ததே என் மனைவிதான். சில எமோஷன்கள் மெல்லிய நகைச்சுவை அதனால் சாத்தியமானது. புரட்சிக்காக என்னுடன் சிறையில் இருந்த பலர், இப்போது ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். எவற்றையெல்லாம் எதிர்த்து போராடினார்களே, அவற்றையெல்லாம் அவர்களே செய்கிறார்கள்.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்.