ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
'கடல்' படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளதாம். 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், கனிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கும் படம் என்றாலே அவர் படப்பிடிப்பை நீண்ட நாட்களாக நடத்துவார். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அவர் மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் என்கிறார்கள். முன்னணி நட்சத்திரங்கள் இல்லாமல், மிகப் பொருட் செலவில் படத்தைத் தயாரிக்காமல் படத்தை மிகவும் எளிமையாகவே உருவாக்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். தற்போது படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது என படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். படத்திற்கு 'ஓகே கண்மணி' என்று பெயரிட்டுள்ளதாக முன்னர் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பி.சி.ஸ்ரீராம் படத்தின் படப்பிடிப்பைப் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதில் 'வாழ்க வளமுடன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.