கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடருக்கு பிறகு புராண தொடர்களுக்கான மவுசு கூடியிருக்கிறது. அதனால் சேனல்கள் இந்தியில் ஏற்கெனவே ஒளிபரப்பான புராண தொடர்களை வாங்கி டப் செய்து ஒளிபரப்புகிறது.
அந்த வரிசையில் புதுயுகம் தொலைக்காட்சியல் கடந்த 17ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது ஸ்ரீகிருஷ்ண அவதாரம். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் மறுநாள் காலை 11 மணிக்கு மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இந்த தொடரில் அரக்கன் கம்சனை அழித்த பிறகு துவாரகையில் கிருஷ்ணர் நடத்தும் நல்லாட்சியை மையமாக கொண்டு கதை நகர்த்தப்படுகிறது. சாகாவரம் பெற்ற காலியவான், துவாரகை நகரம் மீது பெரும்படையுடன் போர் தொடுப்பதும். அந்த போரை எதிர்கொள்ளும் கிருஷ்ணரின் தந்திரங்களும், அதன் மூலம் சொல்லப்படும் நீதிகளும் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகிருஷ்ணரின் மனைவி ருக்மணி லட்சுமி தேவியாக அவதரித்து துவாரகை மன்னர் கிருஷ்ணரை காதலிப்பதும். அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமியின் சகோதரன் ருக்மி கிருஷ்ணரை அழிக்க திட்டம் தீட்டுவதும் அதை முறியடித்து கிருஷ்ணர் லட்சுமியை கரம் பிடிப்பதும் இன்னொரு பகுதி கதை. அதிகமான கிராபிக்ஸ் பிரமாண்டங்கள், யுத்த காட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமெண்ட் என கலவையாக ஒளிபரப்பாகிறது.