மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அர்னால்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டில்லி வந்தார். விழாவில் பேசிய அர்னால்டு, என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. இந்தியாவில் இப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் தங்களது குறிக்கோளில் தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டும், அப்போது நீங்கள் அந்த இலக்கை எட்ட முடியும். பாடி பில்டிங்கில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால் எங்களது வீட்டில் அதற்கு அனுமதிக்கவில்லை சாதாரண மனிதனாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் என் இலக்கு பாடி பில்டிங் தான். ஒருமுறையல்ல வாழ்நாள் முழுக்க பாடிபில்டிங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோளாக இருந்தது. அதன்படி நானும் அதில் ஈடுபாடு காட்டி இப்போது பிரபலமாகியிருக்கிறேன்.
1968ம் ஆண்டு நான் அமெரிக்காவுக்கு வந்தேன். அப்போது அங்கு நடந்த மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் நான் தோல்வியடைந்தேன். அதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அன்றைய இரவு முழுக்க அழுது கொண்டே இருந்தேன். அப்போது எனக்கு 21வயது. அப்போது முடிவு செய்தேன் எல்லா பாடி பில்டர்களையும் நான் தோற்கடிக்க வேண்டும் என்று... உடனடியாக கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க பாடி பில்டர் ஒருவரிடம் முறையாக பயிற்சி பெற்றேன், பிறகு தான் நான் என்னுடைய இலக்கை அடைந்தேன். பெரிய எண்ணம், பெரிய குறிக்கோளால் மட்டுமே நமது இலக்கை அடைய முடியும்.
எனக்கும், நடிகர் சில்வர் ஸ்டோலனுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை இருந்தது. எங்காவது சந்திக்க நேர்ந்தால் கூட இருவரும் பேச மாட்டோம். அப்படி இருந்த நாங்கள் ஒருக்கட்டத்தில் எங்களது சண்டையையெல்லாம் மறந்து நண்பர்களானோம். சமீபத்தில் கூட இருவரும் சேர்ந்து நடித்தோம்.
வாழ்க்கையில் நான் நிறைய தோல்விகளை சந்தித்தேன். அந்த தோல்விகள் பின்னர் என்னை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றது. தோல்வியை கண்டு பயப்படாதீர்கள், குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.
கலிபோர்னியா கவர்னராக இருந்து மக்களுக்கு சேவை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நான் இங்கு இந்தளவுக்கு வளர்ச்சி பெற காரணமே அமெரிக்கா தான். இங்கு அவ்வளவு வளமும், வாய்ப்பு இருக்கிறது. எப்போது உங்களை பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள், இந்த சமூகத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று சந்தியுங்கள்.
இவ்வாறு அர்னால்டு பேசினார்.