இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் 2002ம் ஆண்டுவெளிவந்த 'ரன்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மீராஜாஸ்மின். முதல் படத்திலேயே அவரது நடிப்பில் முத்திரை பதித்து சிறந்த நடிகை என பெயர் வாங்கினார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தவர். தொடர்ந்து பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் அவரால் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. விஜய்யுடன் 'புதியகீதை', அஜித்துடன் 'ஆஞ்சநேயா' நடித்திருந்தாலும், அந்த இரண்டு படங்களும் தோல்விப்படங்களாகவே அமைந்தன. அதன்பின், அவர் நடிப்பில் வெளிவந்த 'ஆயுதஎழுத்து, சண்டக்கோழி, கஸ்தூரிமான்,” ஆகிய படங்கள் மட்டுமே, சொல்லிக்கொள்ளும்படியாக அமைந்தன.
தற்போதுஅவர்நாயகியாகநடித்துள்ள 'விஞ்ஞானி' திரைப்படம், அடுத்த வாரம் வெளிவர உள்ளது. இந்த ஆண்டு, பிப்ரவரிமாதம், திடீரென திருமணம் செய்துகொண்ட மீராஜாஸ்மின், அதன்பின் நடிப்பதிலிருந்து விலகியே இருந்தார். அதன்பின் அவர் நடிப்பாரா? மாட்டாரா?என்பதும் தெரியாமலே இருந்தது. தற்போது, அவர் மீண்டும் நடிக்க வந்து, அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். விரைவில் தயாராகஉள்ள 'இதினும்அப்புறம்' என்ற மலையாளப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளாராம். அறிமுகஇயக்குனர் மனோஜ் அலிங்கல் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நடிக்க வருவார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.