டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோவா திரைப்பட விழாவின் துவக்க விழா கோலாகலமாக நடந்த பின்னர், இந்த திரைப்பட விழாவின் ஆரம்ப படமாக, முதல் படமாக, சர்வதேச புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் மோஷென் மக்மால்பாஃப் இயக்கிய "தி பிரசிடென்ட்", கலா அகாடமியில் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குனருக்கு, நடிகர் அனுபம் கேர் மலர்ச்செண்டு அளித்து கவுரவித்தார்.
115 நிமிடங்கள் ஓடும் இந்த படம், ஜார்ஜியன் மொழியில் உருவாக்கப்பட்ட மனதை தொடுகின்ற படம். பெயர் தெரியாத ஒரு நாட்டின் சர்வாதிகாரியும், அவரது குடும்பமும் எல்லா லக்சுரிகளையும் அனுபவித்து பணத்திமிரில் நாட்டு மக்களை, ராணுவ பலத்தினால் அடக்கி, ஒடுக்கி வாழ்கிறது. திடீரென்று, வெடிக்கும் புரட்சியில் சர்வாதிகாரி குடும்பம் வேறு ஒரு நாட்டிற்கு வெளியேறுகிறது. சர்வாதிகாரியும், அவரது பேரனும் (சிறுவன்) தனித்து விடப்படுகிறார்கள். இருவரும் தப்பித்து ஓடும்போது, அவரது தலைக்கு அவரை உயிருடனோ, பிணமாக பிடிக்க பல லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்படுகிறது. நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவருக்கு எதிராக நாடே எழுகிறது. அவர்கள் இருவரும் தப்பிக்கிறார்களா? அல்லது பழி வாங்கப்படுகிறார்களா? என்பதே மீதிக்கதை.
சர்வாதிகாரியாக (ராணுவ உடை, வெள்ளைத்தாடி) நடிக்கும் மிஷா கோமியாஷ்விலி, பேரனாக நடிக்கும் டச்சி ஒர்லெவாஷ்விலி இருவரும் நிச்சயம் நம் மனதில் நிற்பவர்கள். தன்னுடைய அதிகார பலத்தை பேரனுக்கு விளக்கும் போது, நான் சொன்னால் இந்த நகரேமே மின்சாரம் இழந்து, இருளில் மூழ்கும் என்பார். சில நேரங்களில், நகரம் முழுவதும் வெளிச்சத்தை வரவழைப்பார். அதே உத்தரவை, பேரனையும் போடச் சொல்வார். விளக்குகள் மீண்டும் வராதபோது புரட்சி வெடித்திருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைவார். விமான நிலையத்தை அடைந்து, விமானத்தில் தப்பிக்க முயலும் போது, இரு மகள்களிடையே ஏற்படும் சண்டையில், பேரன் அவர்களுடன் செல்ல மறுக்கிறார். அவரும், பேரனும் தனித்து விடப்படுகிறார்கள். விமான நிலையத்திலேயே எதிர்ப்பு வெடித்து காரில் தப்புகிறார்கள். ராணுவம் சூழ்ந்து கொள்ளும் போது, இருவரும் தந்திரமாக தப்புகிறார்கள்.
கிராமப்பகுதியில் ஒர ஏழை நாவிதரை, துப்பாக்கி முனையில் மிரட்டி, தனக்கு முடிவெட்டி, உருவத்தை மாற்றிக்கொள்கிறார். நாட்டின் அதிபர் தன் வீட்டுக்கு வந்திருப்பது என்று ஏழை நாவிதர் மிரண்டு பிரமித்துப் போகிறார்.ராணுவ உடைகளை களைந்து, நாவிதனுடைய உடைகளை அவரும், நாவிதனின் மகன் உடையை பேரனும் அணிகிறார்கள். கிட்டார் வாசிக்கும் தெருப்பாடகராக இவரும், நடனமாடும் சிறுவனாக பேரனும் மாறுகிறார்கள். பல சோதனைகள், இன்னல்களுக்கு உள்ளாகும் இவரை ராணுவம் துரத்துகிறது.
கடற்கரையை அடைந்து இனி தப்பித்துவிடலாம் என்ற நிலையில் இவர்கள் பிடிபடுகிறார்கள். வெறியில் இருவரையும் தூக்கிட்டு கொல்ல வேண்டும் என்று மக்கள் கூட்டம் கொதி்த்து எழுகிறது. ஒரு பாவமும் அறியாத சிறுவனை பிறகு விட்டுவிடுகிறது. சர்வாதிகாரத்தை ஒழித்து குடியாட்சியை உருவாக்கும் போது ஏன் பழிவாங்க வேண்டும் என்று ஒரு குடிமகன் பேசுவான். சர்வாதிகாரி உயிர் பிழைக்கிறாரா? என்பது ஊகத்திற்கு விடப்படுகிறது.
தாத்தாவை பேரன் யுவர் மெஜஸ்டி என்றே அழைக்கிறான். நான் அதிபரல்ல, வெறும் மனிதன். அப்படி கூப்பிடாதே,. இந்த நாடே நமக்கு விரோதிகள் என்று அவனுக்கு விளக்க படாதபாடு படுவார். தாத்தா - பேரன் இருவரிடையே பேச்சுக்கள் - அதிகாரத்தில் இருந்த போதும், அகதிகளாக வரும் போதும் சரி, பாராட்டலாம். மரியா என்ற சிறு பெண்ணுடன், பேரனுக்கு நட்பு. அவரும் தங்களுடன் வரவேண்டும் என்று அடம்பிடிப்பான். மரியா என்ற அதேபெயரில் ஒரு விலைமாது, இவர்களை தப்பிக்க உதவுகிறாள். இயக்குனர் மோஷென் மக்மால்பாஃப்பிற்கு இந்த படம், பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றுக்கொடுக்கும்.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-