மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் வெளிவருவதற்கு முன்பே பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே லிங்கா கதை என்னுடையது என்று ஒருவர் வழக்கு போட்டிருக்கிறார். இதற்கு விளக்கம் அளித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், கதாசிரியர் பொன். குமரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இது விளம்பரத்திற்காகவும், என் இமேஜை கெடுப்பதற்காகவும் போடப்பட்டுள்ள வழக்கு என்று ரஜினி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வி.நன்மாறன் திரைப்பட தணிக்கை குழுவின் மண்டல அதிகாரிக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
திரைப்படங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளையும், நீதிபதிகள், வழக்கறிஞர்களையும் கேலி கிண்டல் செய்து வந்தார்கள். வக்கீல்கள் போராட்டம் நடத்திய பிறகே அது குறைந்திருக்கிறது. தற்போது தயாரிப்பில் இருக்கும் லிங்கா படத்தில் அத்தகைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்படி காட்சிகள் இடம்பெற்றிருந்தால் படம் ரிலீசுக்கு பிறகு திரைத்துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையே தேவையற்ற சர்ச்சை ஏற்படும். எனவே தணிக்கை குழு, அப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதா என்பதை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும். விருப்பப்பட்டால் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் படத்தை பார்க்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.