விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஜீனத் அமான், மீண்டும் மண வாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். ஜீனத் அமான், சமீபத்தில் தனது மகன்களான அஜான் மற்றும் ஜஹானுடன் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார். இதற்கு பின் ஜீனத் அமான் கூறியதாவது, அஜான் மற்றும் ஜஹான், அவர்கள், தங்கள் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்து வாழ துவங்கி விட்டார்கள், தற்போது, அவர்களுக்கு தான் எந்த ஆலோசனையும் தருவதில்லை. அவர்கள் வளர்ந்து விட்டார்கள், அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை வந்து விட்டது. அவர்களுக்கு, என்னிடத்தில் பேசி மகிழக் கூட நேரமில்லை. தற்போது தான், நான் தனிமையை உணர்கிறேன். இவ்வளவு ஆண்டு காலம், அஜான் மற்றும் ஜஹானிற்காக, என் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தேன். தற்போது, அதற்கான தேவை இல்லாமல் ஆகிவிட்டது. இந்நிலையில், தான் ஒருவரை திருமணம் செய்து மீண்டும் மணவாழ்க்கையை துவக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இதில் ஒன்றும் தப்பு இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று ஜீனத் அமான் கூறினார்.