'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில், தமன் இசையைமப்பில் உருவாகி வரும் 'வாலு' திரைப்படம் அடுத்த மாதம் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 வருடங்களுக்கு முன் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு ஒரு வழியாக முடிந்து விட்டது. சிம்பு தற்போது இந்தப் படத்திற்காக டப்பிங் பேசி வருகிறாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் சிம்புவும், ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பித்து, படம் முடிந்து வெளியாவதற்குள் பிரிந்தும் விட்டனர்.
படம் ஆரம்பமான போது தொடர்ந்து பல நாட்கள் விளம்பரப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதன் பின் படத்தைப் பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவேயில்லை. சிம்பு இந்தப்படம் தவிர, “வேட்டை மன்னன், இது நம்ம ஆளு'' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'இது நம்ம ஆளு' படம் ஏறக்குறைய முடிந்து விட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் கண்டிப்பாக வெளிவந்து விடும் என்கிறார்கள். ஆனால், 'வேட்டை மன்னன்' படம் மேற்கொண்டு வளருமா என்பது சந்தேகம்தான் என திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.
சிம்பு நாயகனாக நடித்து கடைசியாக 'போடா போடி' படம் 2012ம் ஆண்டு வெளிவந்த்து. சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அவருடைய படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. தொடர்ந்தாவது அவருடைய படங்கள் இடைவெளி இல்லாமல் வெளிவரட்டும். வாலு வெளிவருவதைப் பற்றி சிம்பு, “நன்றி..நண்பர்களே...'வாலு' படத்தை டிரெண்டிங்கில் வர வைத்து விட்டனர். உங்களது ஒவ்வொரு பதிவையும் பார்த்து வருகிறேன், கண் கலங்க வச்சிட்டீங்க,” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.