டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பாஸ் என்கிற பாஸ்கரன்' வெற்றிக் கூட்டணியான இயக்குனர் ராஜேஷ், ஆர்யா, சந்தானம் ஆகியோர் மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகிறது. இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். சுமார் 11 மாத இடைவெளிக்குப் பிறகு தமன்னா நடிக்க வரும் தமிழ்ப் படம் இது. அவர் கடைசியாக தமிழில் நடித்த 'வீரம்' இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. அதன்பின் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்காமலே இருந்தார்.
'வீரம்' படத்திற்கு முன் சுமார் 3 வருடங்கள் தமிழ்ப் படங்களில் நடிக்காமலே இருந்தார். அவருக்கும் ஒரு நட்சத்திரக் குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் அதற்குக் காரணம் என்றும் திரையுலகில் பேசிக் கொண்டார்கள். அதனால் தமன்னாவை தமிழில் நடிக்க யாருமே அழைக்கவில்லை, அவரைத் தவிர்க்கவே செய்தார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவியது.
அதையெல்லாம் மீறித்தான் அஜித் அவருடைய 'வீரம்' படத்தில் தமன்னாவுக்கு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள். தற்போது ஆர்யாவுடன் ஜோடியாக ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். வழக்கம் போலவே இப்படம் கலகல காமெடிப் படமாகத்தான் உருவாக உள்ளதாம். இந்தப் புதிய படத்தில் நடிப்பது பற்றி 'முதல் நாள் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்,' என தமன்னா குறிப்பிட்டுள்ளார்.