தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
“சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா அடுத்து இயக்கி வரும் படம் 'மானே தேன பேயே'. இந்தப் படத்தில் 'நெடுஞ்சாலை' படத்தில் நாயகனாக நடித்த ஆரி, பெங்காலி நடிகை சுபஸ்ரீ கங்குலி ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இப்படம் ஒரு ரொமான்டிக் நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. ஆரி, கம்ப்யூட்டர் இஞ்சினயர் ஆகவும், சுபஸ்ரீ டாக்டராகவும் நடிக்கிறார்களாம். கடந்த வாரம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழே தெரியாமல் இருந்தாலும் இயக்குனர் சொல்வதைக் கேட்டு நடிப்பில் சுபஸ்ரீ கங்குலி அசத்தி வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
அழகாகவும், வசீகரமாகவும் உள்ள அவர் படம் வெளிவந்த பின் தமிழில் ஒரு நல்ல இடத்தைப் பிடிப்பார் என்கிறார்கள். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்து வளர்ந்த சுபஸ்ரீ கங்குலி 2008ம் ஆண்டு முதன் முதலில் ஒரு ஒரியா மொழிப் படத்தில்தான் அறிமுகமானாராம். அதன் பின் பத்துக்கும் மேற்பட்ட பெங்காலி மொழிப் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறாராம். நம்ம ஊர் நயன்தாரா அளவிற்கு அங்கு புகழ் பெற்றவராம். கதைக்குத் தேவையென்றால் கிளாமராக நடிப்பதில் கூட தவறில்லை என்பது அவருடைய பாலிசி என்கிறார்கள். அவருடைய வலைத்தளத்திற்குச் சென்று பார்த்தால் அது உங்களுக்கும் புரியும்.
தமிழில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சுபஸ்ரீயின் வரவு எப்படியிருக்கப் போகிறது என்பது படம் வெளிவந்த பின் தெரியும்.