‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமான கெளதம் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வை ராஜா வை. இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியிருக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் டாப்சி ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அதோடு, படத்தின் வியாபாரம் கருதி தனுசும் நட்புக்காக ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை அடுத்து கெளதமை வைத்து படம் இயக்குவதற்கு கதை சொல்லி வைத்திருந்த சில இயக்குனர்கள் அவரது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் வேறு நடிகர்களை தேடிச்சென்று விட்டனர். ஆனபோதும், தற்போது இந்திரஜித், ரங்கூன் ஆகிய படஙகளை கைவசம் வைத்திருககிறார் கெளதம்.
இந்த நிலையில், மகனுக்கு அவ்வப்போது நடிப்பு பற்றிய ஆலோசனைகளை சொல்லி வரும் கார்த்திக, படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் ஓவராக கடலை போடக்கூடாது என்று உபதேசம் செய்திருக்கிறாராம். காரணம், தான் நடிக்கும் படங்களில் உள்ள நடிகைகளுடன் அதிகமாக நட்பு வளர்க்கும் கெளதம், படப்பிடிப்பு தளத்தில் ரிகர்சல் போன்ற விசயங்களை மறந்து விட்டு, அவர்களுடன் ஜாலி அரட்டையடிப்பதறகு முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.