தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
45வது கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்தியன் பனோரமா எனப்படும் 45வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் துவங்கியது. விழாவை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையொட்டி, கடந்த ஆண்டு முதல் இந்திய சினிமா நூற்றாண்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பாலிவுட் நடிகை வகீதா ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த விருதை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்குவதாக மத்திய அரசு நவ.,11ம் தேதி அறிவித்தது. அதன்படி இன்று துவங்கிய கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான இந்திய சினிமா நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும், நடிகர் அமிதாப்பச்சனும், நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்த விருதை வழங்கினர்.
அமிதாப் காலில் விழுந்த ரஜினி : விருது வழங்கி கவுரவிக்கப்பட்டபோது நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
விருது வாங்கியது பெருமை : விருது பெற்ற பின்னர் ரஜினிகாந்த் மேடையில் பேசியதாவது, இதற்கு முன்னர் இந்த கோவா திரைப்பட விழாவிற்கு வர ஐந்து ஆறு முறை வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது என்னால் வரமுடியவில்லை. இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த விருதை அளித்து கவுரவித்த மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த விருதால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் இங்கு இந்தளவுக்கு வர காரணமான என்னுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், அவர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன் என்றார்.
முன்னதாக ரஜினிக்கு விருது வழங்குவதற்கு முன்பாக ரஜினி நடித்த படங்களின் தொகுப்பு அங்கிருந்த அகன்ற திரையில் திரையிடப்பட்டன.