பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பனாஜி : 45வது கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. 45வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் துவங்கியது. விழாவை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையொட்டி, கடந்த ஆண்டு முதல் இந்திய சினிமா நூற்றாண்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பாலிவுட் நடிகை வகீதா ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த விருதை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்குவதாக மத்திய அரசு நவ.,11ம் தேதி அறிவித்தது. அதன்படி இன்று துவங்கிய கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான இந்திய சினிமா நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும், நடிகர் அமிதாப்பச்சனும், நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்த விருதை வழங்கினர்.
அமிதாப் காலில் விழுந்த ரஜினி : விருது வழங்கி கவுரவிக்கப்பட்டபோது நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
விருது வாங்கியது பெருமை : விருது பெற்ற பின்னர் ரஜினிகாந்த் மேடையில் பேசியதாவது, இதற்கு முன்னர் இந்த கோவா திரைப்பட விழாவிற்கு வர ஐந்து ஆறு முறை வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது என்னால் வரமுடியவில்லை. இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இந்த விருதை அளித்து கவுரவித்த மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த விருதால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் இங்கு இந்தளவுக்கு வர காரணமான என்னுடைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீசியன்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், அவர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன் என்றார்.
முன்னதாக ரஜினிக்கு விருது வழங்குவதற்கு முன்பாக ரஜினி நடித்த படங்களின் தொகுப்பு அங்கிருந்த அகன்ற திரையில் திரையிடப்பட்டன.