மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக துவங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் அமிதாப் பச்சன், சமூக பிரச்னைகளை எடுத்து சொல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம், வன்முறையற்ற, அமைதியான படங்களை எப்போதும் இந்திய சினிமா வழங்குகிறது. இது வெளிநாட்டு சினிமாக்காரர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்திய படங்கள் இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது. இந்த உலகம் கிராமம் போன்றது, அதில் நாம் எல்லாம் நல்ல உறவினர்கள், இவை எல்லாவற்றையும் இந்த சினிமா செய்யும். ஜாதி, மதம் கடந்து எல்லா மனிதர்களையும் ஒற்றுமைப்படுத்துவதே இந்த சினிமா தான் என்றார்.