'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
45வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று(நவ 20ம் தேதி) துவங்கியது. விழாவை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிகர், ரத்தோர் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர். இன்று துவங்கும் விழா தொடர்ந்து நவ.,30ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. தமிழில் இருந்து குற்றம் கடிதல் எனும் ஒருபடம் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றுள்ளது.
விழாவின் துவக்க நிகழ்ச்சியாக நடிகை ஷோபனா, நடிகர் வினித் உள்ளிட்ட குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து கோவா திரைப்பட விழாவின் தேர்வுக்குழு உறுப்பினர்களான ஸ்லாமூர் இஜியாக், ஜியாங் ஜியான்யா, நதியா திரஸ்தி, மரியா பெர்னர், சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.