சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
இயக்குனர் ராம்கோபால் வர்மாவும், சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என கடந்த சில மாதங்களாகவே நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் எதையாவது ஒரு கருத்தைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் கடந்த சில வாரங்களாகத்தான் அதிகமாக செய்திகளில் அடிபடாமல் இருக்கிறார். ஆனால், அதற்கு மொத்தமாக தற்போது ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் சம்பூர்ணேஷ் பாபு என்ற ஒரு நடிகர் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். தெலுங்குத் திரைப்படங்களைக் கிண்டலடித்து அவர் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹிருதய கலேயம்' என்ற படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. அதோடு, சமூக வலைத்தளங்களிலும் அவர் நடித்த படங்களின் காட்சிகள், அவரைப் பற்றிய கமெண்ட்டுகள் என பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே, மகேஷ் பாபு நடித்து வெளிவந்த 'ஆகாடு' படத்தின் போது அவரைப் பற்றி மோசமான கமெண்ட்டுகளைப் பதிவிட்ட ராம்கோபால் வர்மா, தற்போது மகேஷ்பாபுவைக் கிண்டலடிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறாராம். 'போக்கிரி ரிட்டர்ன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் சம்பூர்ணேஷ் பாபுதான் நாயகனாக நடிக்கப் போகிறாராம். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் கொதித்துப் போயிருக்கிறார்களாம்.