'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொதுவாக டாப் ஹீரோக்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதையே கவுரவ குறைச்சலாக நினைப்பார்கள். வேறு வழியில்லாமல் உறுப்பினராக சேர்ந்தாலும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். ரஜினி, கமல், விஜய், அஜீத்தெல்லாம் நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டளிக்க வருவதோடு சரி. மற்றபடி அந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டார்கள். ஆனால் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராகியிருக்கிறார். இதற்கான சந்தாவை செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றிருக்கிறார்.
"என் தாய்வீடு சின்னத்திரைதான். சின்னத்திரைதான் என் திறமையை அங்கீகரித்ததோடு அதனை சினிமாவுக்கும் கொண்டு சென்றது. சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதிலும், அதற்காக உழைப்பதிலும் பெருமைப்படுகிறேன். என்னை சின்னத்திரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்கிறார் சிவகார்த்திகேயன்.
"சிவகார்த்திகேயன் சின்னத்திரை என் தாய்வீடுன்னு சொன்னது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் உறுப்பினர் ஆனதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. டி.வி, சினிமா இரண்டுமே ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள்" என்கிறார் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவி நளினி.