ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் உள்ள குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று உழைப்பவர். ஆனால், தற்போது கோடம்பாக்கத்தில் பேய் பட சீசனாகியிருக்கும் நிலையில், அவரும் பிசாசு என்ற படத்தைதான் இயக்கியிருக்கிறார். அப்படியென்றால் மிஷ்கினும் கூட்டத்தோடு கோவிந்தா போடத் தொடங்கி விட்டாரோ? என்று அவரைக்கேட்டால், சற்று மெளனமாகி விட்டு பதில் கொடுக்கிறார்.
அதாவது, இது பேய் படம்தான். மற்ற படங்களில் இறந்து போன ஒரு உயிர் ஆவியாக வந்து எப்படி பழிவாங்குகிறதோ அதே கோணத்தில்தான் கிட்டத்தட்ட இந்த கதையும் செல்வது போல் தெரியும். ஆனால், கதையின் மையக்கரு வேறுமாதிரியாக இருக்கும். அங்குதான் இந்த மிஷ்கின் யார் என்பது புரியும்.
மேலும், இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு நான் நிறைய ஹரார் படங்களை பார்த்தேன். புத்தகங்களை படித்தேன். ஆனால், யாரும் சொல்லாத சில விசயஙகளை சொல்லியிருக்கிறேன். முக்கியமாக இதயம், அன்பு சார்ந்த விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். அது என்ன என்பதுதான் பிசாசு படம். அதேசமயம் இந்த படத்தைப் பார்த்து விட்டு, 11ம் நூற்றாண்டில் வெளியான இத்தாலிய படத்தின் தழுவல் என்று யாராவது சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல என்கிறார் மிஷ்கின்.