பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தூத்துக்குடி, மதுரை சம்பவம் படங்களில் நடித்த ஹரிகுமார் நடித்துள்ள புதிய படம் சங்கராபுரம். இந்த படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தொடங்கப்பட்டபோது, இரண்டு பேர் இணைந்து அந்த படத்தை தயாரித்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களால் படத்துக்கு பைனான்ஸ் புரட்ட முடியாமல் தயாரிப்பில் இருந்து விலகிக்கொண்டனர்.
இதனால் பின்னர் சில மாதங்களாக தயாரிப்பாளர் தேடிக்கொண்டு திரிந்த ஹரிகுமார், தனது சொந்த ஊரான கேரளா சென்று மூன்று பேரை இணைத்து படப்பிடிப்பை தொடர்ந்தார். ஆனால், படம் அரை கிணறை தாண்டியபோது பட்ஜெட் எகிறிக்கொண்டே செல்வதாக குற்றம் சாட்டி இதற்கு மேல் எங்களால் பணம் தரமுடியாது என்று அவர்களும் பின்வாங்கி விட்டார்களாம்.
அதனால், இப்போது தனக்கு தெரிந்த இரண்டு பேரை தயாரிப்பாளராக்கியிருக்கிறார். அவர்கள்தான் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளுக்கான செலவினை செய்திருக்கிறார்களாம். ஆக, இப்போது சங்கராபுரம் பட தயாரிப்பளர்கள் பட்டியலில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருமே, படத்தை விற்றதும் தாங்கள் செலவு செய்த பணத்தையும், லாபத்தில பங்கினையும் தந்துவிட வேண்டும் என்று கூறி வருகிறார்களாம்.
ஆனால், படத்தை விற்பனை செய்ய விநியோகஸ்தர்களுக்கு ஷோ போட்டு காட்டியதை அடுத்து வாங்குவதற்கு யாருமே முன்வரவில்லையாம். அதனால், படத்தை ஓன் ரிலீஸ்தான் செய்ய வேண்டும். அதனால் நீங்கள் அனைவருமே ஒரு தொகையை கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும் என்று அவர்களிடம் பணம் கேட்டு வருகிறாராம் ஹரிகுமார். இதற்கு அவர்கள் தயார் நிலையில் இல்லை என்பதால் சங்கராபுரம் எப்போது ரிலீசாகும் என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.