நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
கற்றது தமிழ், ஆயுதம் செய்வோம் படங்களில் நடித்தபோது சினிமா நண்பர்களிடம் அன்போடு பழகி வந்த அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் ஹிட்டுக்குப்பிறகு நிறைய மாறி விட்டாராம். அதாவது ஏற்கனவே அவருக்கு நன்கு பரிசட்யமானவர்களே தொடர்பு கொண்டு பேசினால்கூட, எதிர்முனையில் பேசுவது யார் என்பது நன்றாக தெரிந்தும், யாரது, யார் வேணும் என்றுதான் பேசுவாராம்.
அதையடுத்து, அவர்கள் தங்களது பெயரை குறிப்பிடும்போது, ஓ அப்படியா? என்ன விசயம் என்று பட்டும் படாமல் கேட்பாராம் அஞ்சலி. இதனால் அவரிடம் பேசியவர்கள் இப்படி முன்ன பின்ன தெரியாதவரிடம் பேசுவது போல் பேசுபவரிடம் எப்படி தொடர்ந்து பேசுவது என்று அதன்பிறகு அஞ்சலியை விட்டு விலகி விட்டார்களாம். அப்படி ஆரம்ப காலத்தில் தான் சினிமாவில் வளர உதவி செய்தவர்களையெல்லாம் ஒரு கட்டத்தில் ஓரங்கட்டி விட்டாராம் அஞ்சலி. அவரது இந்த அதிரடி மாற்றம் பலருக்கு அப்போது அதிருப்தியை கொடுத்ததாம்.
ஆனால், தற்போது ரீ-என்ட்ரியாகியிருககும் அவர், அந்த பழைய நண்பர்களை தேடிச்சென்று பேசுகிறாராம். மார்க்கெட் எகிறியபோது தங்களை பரிசட்யமில்லாதது போல் தவிர்த்த அஞ்சலி மறுபடியும் உதவி வேண்டும் என்பதற்காக தேடி வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட அவர்களோ, இப்போது அஞ்சலியை கண்டுகொள்ளாமல் பாராமுகம் காட்டுகிறார்களாம். இப்படி பழைய பழகின நண்பர்கள் எல்லாருமே அஞ்சலியை நிராகரிப்பதால், இப்போது தனது கூட்டணிக்குள் புதிய நண்பர்களை இணைத்து வருகிறார் அஞ்சலி.