மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அறிமுகமான புதிதில், சிறிய வேடங்களில் தலைகாட்டினாலும், அவை அழுத்தமான வேடங்களாக அமைந்ததால், தமிழ் திரைப்பட ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். கூட மேல கூட வச்சு என்ற பாடலை கேட்டாலே, ஐஸ்வர்யாவின் கள்ளம் கபடமில்லா முகம், ரசிகர்கள் நினைவில் நிழலாடும். தன் திரை அனுபவங்களை நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டார்.
* உங்களுக்கு சினிமாபின்னணி இருக்கிறதா?
என் தந்தை ராஜேஷ், தெலுங்கு படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆனால், நான் சினிமாவுக்கு வருவதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
* நல்ல ஹீரோயினுக்கு என்ன அடையாளம்?
எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகவே வாழணும். சிலருக்கு கவர்ச்சிகரமான உடைகள் பொருந்தாது. இதுபோன்ற நேரத்தில், கவர்ச்சியான உடைகள் பொருந்தும் அளவுக்கு, உடல் வாகை மாற்றி கொள்ள வேண்டும். இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுக்கலாம். ஒரு நல்ல நடிகைக்கு இதுதான் அடையாளம் என நினைக்கிறேன்.
* கவர்ச்சியாக நடிப்பது குறித்து...
கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கலாம். ஆனால், அதற்காக லிமிட் தாண்டக் கூடாது. இது, என்னுடைய பாலிசி.
* நல்லா தமிழ் பேசுறீங்களே?
நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்களுக்கும், சென்னையில் வசிப்பவர்களுக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. பல பட நிறுவனங்கள், இதை என்னிடமே கூறியுள்ளன. இது, எனக்கு மட்டுமல்ல; இங்குள்ள அனைவருக்குமே வருத்தம் தரும் விஷயம்.
* கிசு... கிசு...
எனக்கு, சில நடிகர்கள் வாய்ப்பு வாங்கி தருவதாக தொடர்ந்து கிசு கிசுக்கள் வருகின்றன. ஆனால், எனக்கான வாய்ப்புகள் எல்லாம், பல்வேறு சிரமங்களுக்கு இடையே, நானே போராடி வாங்கியது தான். சில படங்களுக்காக, 10க்கும் மேற்பட்ட முறை கூட, மேக் - அப் டெஸ்ட்டுக்கு போயிருக்கிறேன். முதலில், இதற்காக வருத்தப்பட்டேன். இப்போது பழகி விட்டது.
* அதிகமாகோபப்படுகிறீர்களாமே?
ஆமாம்; அதை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறேன்; முடியவில்லை.
* பிடித்த பாடல்?
கூட மேல கூட வச்சு பாடல் தான் ரொம்ப பிடிக்கும். என் பெயர் தெரியாதவர்கள் கூட, கூட மேல கூட வச்சு பொண்ணு என்று தான் கூப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு, அந்த பாடல் அனைவரிடம் ரீச் ஆகிவிட்டது.
* ரசிகர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்கின்றனரா?
கொஞ்சம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்கின்றனர். ஒரு சில படங்களில் தலைகாட்டிய பின் மீண்டும் படிப்பை தொடர போய்விட்டேன். சினிமா, எந்த அளவுக்கு நம்மை புகழின் உச்சிக்கு கொண்டு போகும் என்பது, அப்போது எனக்கு தெரியவில்லை. மீண்டும், அட்டக்கத்தி படத்தில் நடித்தேன். 10 நிமிடங்கள் மட்டுமே, அந்த படத்தில் வருவேன். ஆனால், எனக்கு அது மிகப் பெரிய பிரபலத்தை கொடுத்தது. அப்போது தான்,
சினிமாவின் உயரம் எனக்கு தெரிந்தது.
* திருடன் போலீஸ் படத்தில் உங்கள் நடிப்புக்கு வரவேற்புஎப்படி?
இந்த படத்தில் நடித்ததற்கு, ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டு கிடைத்துள்ளது. இது, எனக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. காமெடி, சீரியஸ் என, நவரசங்களையும் வெளிப்படுத்துவதற்கு இந்த படத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. இனி, தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறேன்.