வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதையை, கர்நாடகத்தைச் சேர்ந்த பொன் குமரன் எழுதியுள்ளார். லிங்கா படப்பிடிப்புகள் முடிந்து டிசம்பர் மாதம் வெளியிட தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி இயக்குனர் ரவிகுமார், கதாசிரியர் பொன்குமார் உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட பலருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடர்பாக ரஜினி தரப்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் லிங்கா படத்தின் கதையை திருடியதாக கூறப்படும் செய்தி பொய்யானது. இப்படத்தில் நான் நடிகர் மட்டும் தான் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ கிடையாது. என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கவே இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கு நவ.,24ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.