ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த பல வாரங்களுக்கு முன்பு வெளியான படம் வெண்ணிலா வீடு. இந்தப் படம் வெளிவந்து பெட்டிக்குள் திரும்பி விட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா வெண்ணிலா வீடு இயக்குனர் வெற்றி மகாலிங்கத்தைப் பாராட்டி கடிதம் கொடுத்திருக்கிறார் அந்த கடிதத்தில் தமிழ் சினிமாவில் காட்சிகளில் பிரமாண்டம் இருக்கிறது. கதையில் வறட்சி இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
அந்த கடிதத்தில் மேலும் அவர் எழுதியிருப்பதாவது: இன்று திரைப்படங்கள் வெட்டு, குத்து, வன்முறை என வேறொரு தளத்துக்கு சென்று விட்டது. இது பார்வையாளர்களின் குறைபாடு அல்ல. படைப்பாளியின் குறைபாடு. காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. கதை வறட்சியாக இருக்கிறது. ஆனால் வெண்ணிலா வீடு வெள்ளித்திரை சொல்ல மறந்த வெண்பனி வீடு.