தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1967ல் துணைவன் என்ற படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயது நான்கு. அதையடுத்து தென்னிந்திய மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பரவலாக நடித்தார். அதன்பிறகு அவரை, மூன்று முடிச்சு படத்தில் கே.பாலசந்தர் கதாநாயகியாக நடிகக வைத்தார்.
இப்படி தனது கேரியரை தொடங்கிய ஸ்ரீதேவி, தென்னிந்திய படங்களில் நம்பர்-ஒன் நடிகையாக திகழ்ந்தவர். பின்னர் பாலிவுட்டிலும புகழ் கொடியேற்றினார். திருமணத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளியையடுத்து, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த ஸ்ரீதேவி, 28 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடிக்கும் மாரீசன் படம் மூலம் நேரடியாக தமிழில் நடிக்க வ்ந்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவி, தற்போது அப்படத்துக்காக உருவாக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அரண்மனை செட்டில், தனது மகளாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு சரிசமமாக ஒரு பாடல் காட்சியில் நடனமாடிக்கொண்டிருக்கிறார். அதோடு, இடைவேளை நேரங்களில் தனது கடந்தகால மலரும்நினைவுகளிலும் மூழ்கிப்போகிறாராம் அவர்.