டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே படங்களையடுத்து சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. இதில் சண்டமாருதம் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், சீனி படத்திலோ முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும், அந்த படத்தில் முதன்முறையாக யானையுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
அந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், கேரளாவில் உள்ள திருச்சூரில் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சிலர் யானைகளை வளர்க்கிறார்கள். அதனால் சின்ன வயதில் இருந்தே நான் யானைகளை தொட்டு விளையாடியிருக்கிறேன். அதன் காரணமாக, யானையுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பயமும் ஏறபடவில்லை என்று கூறும் ஓவியாவிடம், மீண்டும் நீங்கள் விமலுடன் இணைந்து நடிக்காதது ஏன? என்று கேட்டபோது, வாய்பபு வரவில்லை அதனால் நடிக்கவிலலை என்கிறார்.
மேலும், நான் களவாணி படத்தில் விமலுடன்தான் அறிமுகமானேன். அதன்பிறகு கலகலப்பு, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, புலிவால் போன்ற படங்களில் நடித்தேன். அந்த சமயத்தில், விமல் எனக்கு சிபாரிசு செய்வதாகக்கூட செய்திகள் பரவின. ஆனால், அவர் ஒரு படத்திற்கு கூட எனக்கு சிபாரிசு செய்ததில்லை. அந்த கதைகளுககு நான் பொருந்தியதால் டைரக்டர்கள் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதோடு, களவாணி, கலகலப்பு போன்ற படங்கள் வெற்றி பெற்றதால் அதன்பிறகும் இரண்டு படங்களில் இணைந்தோம் என்று கூறும் ஓவியா, வெறும் சிபாரிசுகளை வைத்து சினிமாவில் முன்னேற முடியாது. திறமைகளும், வெற்றிகளும்தான் நடிப்பவர்களின் மார்க்கெட்டை தீர்மானிக்கும் என்கிறார்.