தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அருவா-கம்பு கதைகள் என்றாலே கோடம்பாக்க டைரக்டர்கள் லொகேஷன் பார்க்க செல்வது மதுரைக்குத்தான். ஆனால், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமியும், இப்போது மதுரை கதைக்களத்தில் இடம் பொருள் ஏவல் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
ஆனால், அருவா கம்புக்கு அவர் படத்தில் வேலையே இல்லையாம். வழக்கம்போல் நல்லதொரு உயிரோட்டமான கதையை தான் படமாக்கிக் கொண்டிருக்கிறாராம். ஈரம் காயாத மதுரை மண்ணின் அன்பு, பாசம், காதலை ஒரு கலவையாகத்தான் இந்த படத்தில் இயக்கியிருக்கிறாராம். மேலும், அப்படத்தில் நடித்துள்ள விஜயசேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஆகியோர் மதுரை ஸ்லாங்கில்தான் பேசி நடித்திருக்கிறார்களாம்.
குறிப்பாக, விஜயசேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் பண்ணையாரும் பத்மினியும் படத்திலேயே மதுரை தமிழ் பேசி நடித்து விட்டார்கள். ஆனால் விஷ்ணு-நந்திதாவைப் பொறுத்தவரை அவர்களுக்கு மதுரை தமிழ் சரியாக வரவில்லையாம். அதனால், படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றிருந்த இடத்தில் அந்த ஏரியா மக்களுடன் பேசிப்பழகி தங்களை தயார்படுத்திக்கொண்டார்களாம்.