டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அவள் அப்படித்தான் இயக்குநர் ருத்ரைய்யா காலமானார். அவருக்கு வயது 67. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்தவர் ருத்ரைய்யா. சினிமா மீது ஆர்வம் கொண்டு திரைத்துறைக்கு வந்தவர். ஆரம்பத்தில் திரைப்பட கல்லூரியில் பயின்று பின்னர் 1978-ஆம் ஆண்டு வெளிவந்த "அவள் அப்படித்தான் படத்தை இயக்கி திரையுலகில் நுழைந்தார் ருத்ரைய்யா. சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், தான் திரைப்பட கல்லூரியில் படித்த அனுபவத்தை கொண்டு சினிமாவில் களம் இறங்கினார்.
இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும், அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய "கிராமத்து அத்தியாயம்" என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.
சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ருத்ரய்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
ருத்ரைய்யாவுக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், கங்கா என்ற மகளும், தீலிபன் என்ற மகனும் உள்ளனர். மகள் கங்கா கனடாவில் வசிக்கிறார். தந்தையின் மறைவு குறித்து அவருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன் வியாழக்கிழமை ருத்ரைய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது. தற்போது அவரது உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.