சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வரும் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யுடிவி நிறுவனத்தின் தென்னிந்திய நிர்வாக தலைவராக இருப்பவர் தனஞ்செயன். திரைப்பட தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தனஞ்செயன் சினிமாவை நேசிப்பவர். அதுமட்டுமல்ல, சிறந்த திரைப்பட ஆய்வாளர் மற்றும் விமர்சகராகவும் முத்திரை பதித்தவர்.
1931-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படைப்புகள் குறித்தும், கலைஞர்கள் குறித்தும் த பெஸ்ட் ஆப் தமிழ்சினிமா (THE BEST OF TAMIL CINEMA ) என்ற புத்தகத்தை ஏற்கெனவே எழுதியிருக்கிறார்.
இது தவிர மின்மினி பூச்சிகள் உட்பட தமிழ் சினிமா குறித்த வேறு சில புத்தகங்களையும் எழுதியுள்ள தனஞ்செயன் இப்போது பிரைட் ஆப் தமிழ்சினிமா(PRIDE OF TAMIL CINEMA) என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். 1931-ஆம் ஆண்டிலிருந்து துவங்கி 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் தேசிய விருது பெற்ற, மற்றும் சர்வதேச பட விழாக்களில் விருது பெற்ற படங்களின் தொகுப்பு இது.
பிரைட் ஆப் தமிழ்சினிமா(PRIDE OF TAMIL CINEMA) புத்தகம் இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் கோவாவில் நடைபெறவிருக்கிற இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில், வெளியிடப்படவிருக்கிறது.
தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் வகையிலும், இந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல், உலக சினிமா பிரபலங்களும் தமிழ்சினிமாவை அறிந்துகொள்ளும் விதத்திலும் இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார் தனஞ்செயன். இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள திரைப்பட தகவல்கள் சம்பந்தப்பட்ட படங்களின் புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது.