பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவில் வடிவேலு காலகட்டம் மாறி சந்தானத்தின் காலம் வந்தது. இருவருமே ஹீரோவாகத்தான் நடிப்போம் என்ற முடிவெடுத்த பிறகு அடுத்த செட்டுகள் வந்தது. அதில் வேகமாக வளர்ந்து வருகிறார் பால சரவணன்.
இவரும் சின்னத்திரையில் இருந்து வந்த காமெடியன்தான். மதுரையைச் சேர்ந்த பால சரவணன் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பல குறும்படங்களிலும் நடித்தார். அதன் பிறகு ஈகோ என்ற படத்தின் மூலம் காமெடியன் ஆனார். குட்டிப்புலியும், பண்ணையாரும் பத்மினியும் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் முழு நீள காமெடியன். தற்போது வெளிவந்திருக்கும் திருடன் போலீஸ் படத்திற்கு பிறகு பால சரவணனின் சம்பளமும், இமேஜும் உயர்ந்திருக்கிறது. மற்ற காமெடி நடிகர்கள் ஆச்சர்யத்தோடு திரும்பி பார்க்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் டார்லிங், சீனு ராமசாமியின் இடம் பொருள் ஏவல், வலியவன், நகர்வலம், ஆ, வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், வரைபடம் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் பால சரவணன்.