ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை சொல்லும் நேரடியான திரைப்படங்களை எடுத்தபோது கூட தங்கள் கட்சி சின்னத்தின் பெயரை தலைப்பாக வைத்ததில்லை. இப்போது முதன்முறையாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னமான இரட்டையிலையின் பெயரில் ஒரு படம் தயாராக இருக்கிறது.
மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி முன்பு உள்ள வடிவத்தையே படத்தின் இமேஜாக பயன்படுத்தியிருக்கிறார்கள். விஷ்ணு ப்ரியன் என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஜகந்நாதன் கதை எழுதியுள்ளார். விருதை சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் எம்.பரமசிவம், டாக்டர் விஸ்வநாதன், சி.தில்லை சிவம் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
அ.தி.மு.வின் கொள்கை விளக்க படமாகவோ, அல்லது சமீபத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சந்தித்து வரும் சட்ட பிரச்னைகளை மையமாக வைத்தோ இந்த படம் தயாராகலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே கன்னடத்தில் அம்மா என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.