அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சந்தானம் நடிக்க வந்த ஆரம்பத்தில, அவரது நடிப்பு கவுண்டமணி சாயலில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் அதற்கு அவரோ, யார் சாயலிலும் நான் நடிக்கவில்லை எனது பாணியில்தான் நடிக்கிறேன் என்று இப்போதுவரை உடன்படாமலேயே இருந்து வருகிறார். அதோடு, தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேணடும் என்பதற்காகவும் சமீபகாலமாக வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமின்றி உடல்மொழி காமெடிகளையும் வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் சநதானம்.
இந்தநிலையில், கவுண்டமணிதான் என்னை கவர்ந்த காமெடியன். அதனால் அவர் பாணியில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று சொலலிக்கொண்டு, அவர் சாயலில் காமெடிகளை உதிர்த்து வருகிறார் சிங்கம்புலி. அதனால் தற்போது ஷோலோ காமெடியனாக தான் நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் வரும்போது கவுண்டமணி எந்த மாதிரி லொள்ளு காமெடிகளை பேசி நடிப்பாரோ அந்த பாணியில் தானும் நடித்து வருகிறார்.