இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
வெங்காயம் என்ற படத்தை இயக்கியவர் சங்ககிரி ராஜ்குமார். அந்த படத்தை இயக்கியதோடு இல்லாமல் ஒரு கேரக்டரிலும் நடித்திருந்தார். பெரியாரிசத்தை முன் வைத்து மூட நம்பிக்கைகளுக்கு சிறுவர்களே சவுக்கடி கொடுக்கும் வகையில் உருவாக்கபபட்ட அந்த படத்தில் சத்யராஜூம் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். இருப்பினும் அப்படம் பெரிய அளவில் ஓடவில்லை.
ஆனால், சினிமா உலகைச்சேர்ந்த சில இயக்குனர்களை அந்த படம் வெகுவாக பாதித்தது. முக்கியமாக டைரக்டர் சேரன், வெங்காயம் படத்தை பப்ளிசிட்டி செய்தால் மக்களை சென்றடையும் என்று சொல்லி, விளம்பரங்களை முடுக்கி விட்டு தானே மீண்டும் முககிய தியேட்டர்களில் வெங்காயம் படததை வெளியிட்டார். ஆனால் அப்போதும் படம் ஓடவில்லை. அதனால் நஷ்டம் ஏற்பட்டு அவர் கையை கடித்து விட்டது.
இந்தநிலையில், அதையடுத்து, மீண்டும் ஒரு சமூக களையெடுக்கும் ஒரு கதையுடன் நெடும்பாறைக்காடு என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். மலைப்பகுதியில் வாழ்ந்த ஒருவன் நகரத்துக்கு வரும்போது அவர் சந்திக்கிற பிரச்சினைகளை இப்படம் சொல்கிறதாம். மொத்த வேலைகளும் முடிந்து விட்ட இப்படம் எப்போது வெளியாகிறது என்று அப்படக்குழுவினரிடம் கேட்டபோது, சிறிய பட்ஜெட் படம் என்றாலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஷாட்களை வைத்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர். அதனால் ஒரு நல்ல கம்பெனியிடம் படத்தை கொடுத்தால் அவர்கள் பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்து படத்தை மக்களிடம் முழுசாக கொண்டு செலவார்கள் என்பதால், படத்தை வாங்கி வெளியிட சில நிறுவனங்களிடம் அவர் பேசி வருவதாக கூறுகிறார்கள்.