தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அத்தி பூத்தாற் போல ஏதாவது ஒரு சினிமா விழாவில் கலந்து கொண்டு வந்தார் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன். அப்போது அவரிடத்தில் சினிமாவில் எப்போது பாடல் எழுதுவீர்கள் என்று கேட்டவர்களிடம், சரியான சந்தர்ப்பம் வரும்போது எழுதுவேன் என்று கூறிவந்த அவர், பின்னர், டைரக்டர் பாலாவின் படைப்புகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளன. அதனால் அவரது படம் மூலம் நான் சினிமாவில் பாடலாசிரியராக விரும்புகிறேன் என்று கூறினார்.
அதறகு பாலாவும், நான்தான் தமிழச்சி தங்கபாண்டியனை சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் செய்வேன் என்றும் கூறி வந்தார். ஆனால், இப்போது பாலா தயாரிப்பில் பிசாசு படத்தை இயக்கியுள்ள மிஷ்கின் முந்திக்கொண்டுள்ளார். அதாவது, பாலாவை போலவே தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதைகளில் ஈர்க்கப்பட்ட மிஷ்கின், பிசாசு படத்தில் அவரை அனைத்து பாடல்களையும் எழுத வைத்திருக்கிறார்.
இதுபற்றி தமிழச்சி தங்க பாண்டியன் கூறுகையில், பிசாசு படத்தில் பாடல் எழுதுவது எனக்கு சற்று சவாலாகத்தான் இருந்தது. காரணம், பிசாசு என்பதற்கு உருவம் கிடையாது. பிசாசும் சைத்தானும் ஒன்றுதான். அதனால் அதை மனதில் கொண்டு பாடல்கள் எழுதினேன். அதோடு, மிஷ்கின் எனக்கு முழுசுதந்திரம் கொடுத்தார். முக்கியமாக, சினிமாவுக்கு பாடல் எழுத போதிய அனுபவம் எனக்கு இல்லை என்பதால், அவர் நிறைய உதவி செய்தார். அந்த வகையில், இந்த படத்தின் பாடல்களில் அவருக்கும் சம அளவு பங்கு உள்ளது. முக்கியமாக, மெட்டுக்கு பாடல் எழுதாமல் பாடலுக்கு மெட்டு அமைத்தார்கள்.