Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்சாருக்கு பயப்படாதவன் நான்: கமல் பேச்சு

16 நவ, 2014 - 17:43 IST
எழுத்தின் அளவு:

இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அசோக் கே.பேங்கர். புராண இதிகாச கதைகளை ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர். இவரது நூல்கள் 18 மொழிகளிலும், 54 நாடுகளிலும் வெளிவருகிறது. அவர் தற்போது எழுதியுள்ள நாவல் டென் கிங்ஸ். இது ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் 10 மன்னர்களின் கதை. இந்த புத்தக வெளியீட்டு விழா நவ 15ம் தேதி சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. புத்தகத்தை கமல் வெளியிட இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் பெற்றுக் கொண்டார்.


பின்னர் கமல் பேசியதாவது: புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனைவருமே தன்னடக்கம் உள்ளவர்கள். நளவெண்பாவை எழுதியவரே அல்லிக் கொடியால் யானையை கட்ட முயற்சித்திருக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதேபோல இந்த நூலை எழுதியிருக்கும் பேங்கரும் தன்னடக்கமாக குளத்தில் நீந்தி பழகிய நான் கடலில் நீந்த முயற்சித்திருக்கிறேன் என்று சொன்னார்.


மகாபாரதம், ராமாயணம் போன்றவை காலம் காலமாக திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருவதாலேயே வாழ்கிறது. பாட்டி சொன்ன கதை பேத்திக்கு வந்து சேர்வதைப்போலத்தான் இதுவும். நானும் ராமாயாணம், மகாபாரத்தை சொல்வேன். அது எப்படி எந்த வடிவத்தில் என்று தெரியவில்லை. எனது பகுத்தறிவை கேட்டு அது சொல்கிறபடி எடுப்பேன்.


இங்கே மத்திய அரசின் தணிக்கை அதிகாரி வந்திருக்கிறார். அவரை பார்த்து எல்லோரும் பயப்படுவதாக சொல்வார்கள். நான் எந்தக் காலத்திலும் சென்சாரை பார்த்து பயந்ததில்லை. இனியும் பயப்பட மாட்டேன். தப்பு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். அவர் தன் கடமையை செய்கிறார். என் படங்களுக்கு அவர் சான்றிதழ் கொடுத்த பிறகுதான் பிரச்னைகள் வரும்.


சென்னை வாசிப்பாளர்கள் நிறைந்த ஊர், உலகின் பெரிய இசை விழா நடக்கும் ஊர். தினந்தோறும் சாதனைகளை படைக்கும் ஊர். எனவே இந்த நூலை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு கமல் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in