ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அசோக் கே.பேங்கர். புராண இதிகாச கதைகளை ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர். இவரது நூல்கள் 18 மொழிகளிலும், 54 நாடுகளிலும் வெளிவருகிறது. அவர் தற்போது எழுதியுள்ள நாவல் டென் கிங்ஸ். இது ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் 10 மன்னர்களின் கதை. இந்த புத்தக வெளியீட்டு விழா நவ 15ம் தேதி சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. புத்தகத்தை கமல் வெளியிட இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கமல் பேசியதாவது: புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனைவருமே தன்னடக்கம் உள்ளவர்கள். நளவெண்பாவை எழுதியவரே அல்லிக் கொடியால் யானையை கட்ட முயற்சித்திருக்கிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதேபோல இந்த நூலை எழுதியிருக்கும் பேங்கரும் தன்னடக்கமாக குளத்தில் நீந்தி பழகிய நான் கடலில் நீந்த முயற்சித்திருக்கிறேன் என்று சொன்னார்.
மகாபாரதம், ராமாயணம் போன்றவை காலம் காலமாக திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருவதாலேயே வாழ்கிறது. பாட்டி சொன்ன கதை பேத்திக்கு வந்து சேர்வதைப்போலத்தான் இதுவும். நானும் ராமாயாணம், மகாபாரத்தை சொல்வேன். அது எப்படி எந்த வடிவத்தில் என்று தெரியவில்லை. எனது பகுத்தறிவை கேட்டு அது சொல்கிறபடி எடுப்பேன்.
இங்கே மத்திய அரசின் தணிக்கை அதிகாரி வந்திருக்கிறார். அவரை பார்த்து எல்லோரும் பயப்படுவதாக சொல்வார்கள். நான் எந்தக் காலத்திலும் சென்சாரை பார்த்து பயந்ததில்லை. இனியும் பயப்பட மாட்டேன். தப்பு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். அவர் தன் கடமையை செய்கிறார். என் படங்களுக்கு அவர் சான்றிதழ் கொடுத்த பிறகுதான் பிரச்னைகள் வரும்.
சென்னை வாசிப்பாளர்கள் நிறைந்த ஊர், உலகின் பெரிய இசை விழா நடக்கும் ஊர். தினந்தோறும் சாதனைகளை படைக்கும் ஊர். எனவே இந்த நூலை தமிழிலும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கமல் பேசினார்.