அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாரத பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். இதில் நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும் சேர்ந்திருகிறார். ஐதராபாத்தில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு தனது காஸ்ட்யூம் டிசைனர் நீரஜா மற்றும் சில தன்னார்வ தொண்டர்களுடன் திடீரென சென்ற சமந்தா. அங்கு தூய்மை பணியில் இருந்த துப்புறவு தொழிலாளர்களுடன் இணைந்து தானும் பள்ளியை சுத்தப்படுத்தினார்.
அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுள்ள சமந்தா, அது பற்றி எழுதியிருப்பதாவது: தூய்மை இந்தியா திட்டம் அற்புதனமானது அதன் ஒரு சிறு பகுதியாக இருப்பதில் எனக்கு சந்தோஷம். பள்ளியை சுத்தப்படுத்திய அந்த நாள் என்னால் மறக்க முடியாத நாள். அங்கு சுத்தப்படுத்தும் தொழிலாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம்தான் சம்பளம். இது எப்படி அவர்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்று தெரியவில்லை. எல்லோரும் முதலில் அவரவர் வீட்டையும, அதை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு சமந்தா எழுதியிருக்கிறார்.