பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் விஜய் நடிக்கும் அவருடைய 58வது படம். சிம்புதேவன் இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையைமப்பில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பமானது. தற்போது ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டவர்கள் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். 'நான் ஈ' படத்திற்குப் பிறகு கன்னட நடிகரான சுதீப் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வந்துள்ளார். அதிலும் தமிழில் நடிக்கும் இரண்டாவது படத்திலேயே விஜய், ஸ்ரீதேவி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நடிப்பது அவரை நிறையவே பெருமிதம் கொள்ள வைத்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், “மிகவும் அழகான அற்புதமான ஸ்ரீதேவி அவர்களின் வருகையால் செட்டில் உள்ள அனைவருமே மயங்கிக் கிடக்கிறோம். அவருடைய நடிப்பைப் பார்க்கும் அனைவரையுமே அவர் ஈர்த்துக் கொள்வார். இளையதளபதியும், நானும் ஒன்றாக நடனமாடினோம். அப்படித்தான் எங்களது படப்பிடிப்பு ஆரம்பமானது. அது மிகவும் ஜாலியாக இருந்தது. அவருடைய உபசரிப்பு மிகவும் அருமை. அவர் ஒரு ஜென்டில்மேன்,” என ஸ்ரீதேவியையும், விஜய்யையும் புகழ்ந்து தள்ளியுள்ளார் சுதீப்.
விஜய்யைப் பற்றிய சுதீப்பின் இந்தப் புகழாராம் விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. காலை முதலே 'லிங்கா' பரபரபப்பையும் மீறி, சுதீப் விஜய்யைப் பற்றிக் குறிப்பிட்ட ''ஜென்டில்மேன், இளையதளபதி” ஆகிய இரண்டு வார்த்தைகளும் 'லிங்கா' டிரெண்டிங்கை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்திய அளவில் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றன.