சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சென்னை சத்யம் தியேட்டரில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திரையுலகமே திரண்டு வந்துள்ள அந்த விழாவை நடிகர் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்குகிறார். பாடல்காட்சிகள், முன்னோட்டம் திரையிட்ட பிறகு, லிங்கா படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் மேடைக்கு அழைத்தனர். லிங்கா இசைவெளியீட்டு விழாவில் பிரபலங்கள் என்ன பேசினார்கள்? இதோ உங்களுக்காக...
ரஜினியை மேடைக்கு அழைப்பதற்கு முன், “வேற ஒரு படத்துல இவர் போட்டோவை காட்டினாலே கைதட்டல் அதிரும்,இப்ப இவரே மேடைக்கு வரப்போறாரு” - என்று மிர்ச்சி சிவா சொல்ல அரங்கமே அதிர்ந்தது. இத்தனைக்கும் ரஜினி என்ற பெயரை சிவா உச்சரிக்கவே இல்லை.
* தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கேயார் பேசும்போது,“ரஜினி படம் வெளியாகும் நாட்களை அவரது ரசிகர்கள் தங்களின் பிறந்தநாளைப்போல் கொண்டாடுவார்கள். லிங்கா படமோ ரஜினியின் பிறந்த நாளிலேயே வருகிறது. அதுதான் லிங்கா படத்தின் ஸ்பெஷாலிட்டி” என்று குறிப்பிட்டார்.
* தேசிய கீதம் படம் வெளியான போது ரஜினி குறித்து ஒரு பத்திரிகை பேட்டியில் சொன்ன கருத்தையே தன் பேச்சிலும் குறிப்பிட்டார் இயக்குநர் சேரன்... “ காந்தி, காமராஜருக்கு அப்புறம் உங்களத்தான் தலைவரா பாக்குறோம். எங்கள் பாசம் உண்மை. உங்கள நம்பிட்டோம், நல்லது பண்ணுங்க” என்றவர் ரசிகர்களின் சந்தோஷத்துக்காக நீங்கள் நிறைய படங்கள் பண்ண வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார் சேரன்.
* நடிகர் விஜயகுமார் பேசும்போது, இந்த நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்ல மாட்டான் என்று கூறிவிட்டு, “மக்கள் உங்களுக்கு பெரிய விருதை விரைவில் அளிப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள் ரஜினி அவர்களே...” என்று பேசினார்.
* லிங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு பேசும்போது, ரஜினியை தமிழ்நாட்டின் கடவுள் என்று குறிப்பிட்டார்.
* அவருக்கு முன் பேசிய லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்தப்படத்தை கடவுளை நம்பித்தான் ஆரம்பித்தேன். அவர்தான் நல்லவிதமாக முடித்துக் கொடுத்தார். அந்த கடவுளின் பெயர் ரஜினி என்று பேசினார்.
* நகைச்சுவை நடிகர் சந்தானம் லிங்கா படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு, “ இவ்ளோவ் வெறித்தனமான ரசிகர்களை நான் பார்த்ததே இல்லை. அந்த ரசிகர்களை இவ்ளோவ் வெறித்தனமா நேசிக்கிற நடிகரையும் நான் பார்த்ததில்லை” என்று பேசினார்.
* லிங்கா படத்தின் கதாசிரியரான பொன்குமரன், லிங்கா கதையை இரண்டு வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிகுமாருக்கு சொன்னதாக குறிப்பிட்டார். கதையைக் கேட்ட உடனே இது ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார் ரவிகுமார் என்று பேசினார்.
* லிங்கா படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பேசும்போது, ரஜினியை முடிந்த அளவுக்கு இளமையாகக் காட்ட முயற்சி செய்திருப்பதாக தெரிவித்தார். ஒரு ரசிகனாக அவரை ரசித்து படமாக்கியதாகவும் கூறினார்.