10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? |
45-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா இம்மாதம் 20ம் தேதி கோவாவில் ஆரம்பமாக உள்ளது. அதில் தமிழிலிருந்து 'குற்றம் கடிதல்' என்ற படம் மட்டுமே இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட உள்ளது. ஒரே ஒரு தமிழ்ப் படத்தைத் தவிர வேறு எந்தப் படமும் திரையிடப்படாதது அதிர்ச்சியான ஒன்றுதான் என்றாலும் திரைப்பட விழாக்களில் அதிகமான தமிழ்ப் படங்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏன் தயாராவதில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், நல்ல தமிழ்ப் படங்கள் போட்டிக்கு வரவில்லை, அதனால்தான் ஒரே ஒரு படம் தேர்வு செய்யப்பட்டது என்று இந்தியன் பனோரமாவின் தேர்வுக் குழுவில் ஒருவராகவும் இடம் பெற்ற நடிகை அர்ச்சனா தெரிவித்துள்ளார். அர்ச்சனாவின் இந்தக் கருத்துக்கு இயக்குனர் வசந்தபாலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நடிகை அர்ச்சனா தமிழில் குற்றம் கடிதல் தவிர நல்ல படங்கள் வரவில்லை என்று கூறுகிறார். அதனால் தான் கோவா திரைப்படவிழாவிற்கு ஒரு படம் தவிர வேறு எந்த படமும் தேர்வு செய்யப்படவில்லையாம். இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது. என் சக சமகால இயக்குனர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
நம் தமிழ் சினிமாவின் தரத்தையே கேலிக்குள்ளாக்குவது போல நடிகை அர்ச்சனா பதில் அளித்துள்ளார்கள். நாம் இதை தீர்க்கமாக எதிர்க்க வேண்டிய, முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்னை,” என அவர் தெரிவித்துள்ளார்.