இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
முன்னணி நடிகர்கள் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையிலேயே அவர்களின் அடுத்த படங்களைப் பற்றி அவர்களது ரசிகர்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள். விஜய் நடித்த 'கத்தி' படம் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு விட்ட நிலையில், அவர் அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமாகிவிட்டது. இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 58வது படமாகும்.
அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ளது. இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அஜீத் அடுத்து 'வீரம்' படத்தைய இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அஜீத் நடிக்கும் 56வது படமாகும். இன்னும் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களைப் பற்றியும், படத்தைப் பற்றியும் முறையான அறிவிப்பு வரவில்லை. ஆனால், அதற்குள் அவரது ரசிகர்கள் படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
விஜய்யின் 58வது படமும், அஜீத்தின் 56வது படமும் 2015ம் ஆண்டு தீபாவளிக்கு வர வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருட தீபாவளிக்கு வர இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் இரண்டு படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஆறேழு மாதங்களுக்குள் நிறைவடைந்து தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகிவிடும் என்கிறார்கள்.
2014 பொங்கலுக்கு அஜீத்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' நேருக்கு நேர் மோதியதைப் போல 2015 தீபாவளிக்கு 'தல 56, விஜய் 58' மோத வாய்ப்பு அதிகமாக உள்ளது.
லெட்ஸ் ஸ்டார்ட் மியூசிக்... அஜீத் அன்ட் விஜய் ஃபேன்ஸ்...!!