நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
டைரக்டர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடித்தனர். அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் ஒரே படத்தில் பேசப்படும் இயக்குனரானார் அட்லி. அதோடு, எனது அடுத்த படத்தில் முன்னணி ஹீரோக்கள்தான் நடிப்பார்கள் என்று அப்போதே நம்பிக்கையுடன் சொன்னார்.
அதன்பிறகு சில முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வந்தவர், இப்போது விஜய்யிடமே கதை சொல்லி ஓ.கே செய்து விட்டார். அந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறாராம். மாரீசன் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தநிலையில், அட்லியின் ராஜா ராணி படத்தில் நடித்த நயன்தாராவே அந்த படத்திலும் நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே விஜய்யுடன் சிவகாசி, வில்லு படங்களில் நடித்தவர் என்பதோடு, ரீ-என்ட்ரியிலும் அஜீத், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களுடன் மீண்டும் நடித்து வருவதால், விஜய்யுடன் அவர் நடிப்பதாக வெளியான செய்தியும் நம்பக்கூடியதாகவே இருந்தது. ஆனால், இப்போது அதுபற்றி விசாரித்தால், விஜய்யை அட்லி இயக்கும் படத்துக்கு இன்னும் கதாநாயகி யார் என்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை என்கிறார்கள். அதோடு, நயன்தாரா நடிப்பதாக வெளியாகியிருப்பது வதந்திதான். இன்னும் சில மாதங்களுக்கு பிறகுதான் கதாநாயகி யார் என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.