ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றிய ரமேஷ் ரங்கசாமி இயக்கியிருக்கும் படம் பொங்கி எழு மனோகரா. இந்த படத்தில் இர்பான், அருந்ததி நாயர், அர்ச்சனா, சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். கண்ணன் இசையமைக்க, அண்ணாமலை பாடல் எழுதியுள்ளார். பரந்தாமன் தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
அப்போது டைரக்டர் ரமேஷ் ரங்கசாமி பேசுகையில், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் நிறைய போராட்டங்களை சந்தித்தேன். அப்போது எனது சொந்த தம்பிகூட என்னை நம்பி ஒரு 100 ரூபாய் தரவில்லை. அதோடு, வேலை வெட்டியில்லாதவன் என்று யாருமே பெண் தரவில்லை. எனது மாமனாரிடம் ரஜினியெல்லாம் தெரியும் என்று சில பொய்களை சொல்லித்தான் திருமணமே செய்தேன். அதன்பிறகு சென்னைக்கு மனைவியை அழைத்து வந்து பத்துக்கு பத்து அளவுள்ள வீட்டில் குடியேறினேன். அப்போது நான் சினிமாவில் ஜெயிப்பதற்காக என் மனைவி ஒரு பர்னிச்சர் கடைக்கு வேலைக்கு சென்றார்.
அப்படி கடுமையான போராட்டத்துக்கு பிறகுதான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். என்னையும், எனது கதையையும் நம்பி தயாரிப்பாளர் பரந்தாம் இரண்டறை கோடி செலவு செய்திருக்கிறார்.
மேலும், இப்படத்தை என் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 1995ல் நடககும் இந்த கதை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் 23 நாட்கள் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டது. இதில் அண்ணாமலை படத்தில் ரஜினி நடித்த பால்காரன் வேடத்தில் இர்பான் நடித்துள்ளார்.
சத்யராஜ்- கவுண்டமணி நடிக்கும் படங்களில் காமெடி காட்சிகள் இடம்பெறுவது போன்று இந்த படத்தில் இர்பானும்-சிங்கம்புலியும் படம் முழுக்க காமெடி கடை விரித்திருக்கிறார்கள். அந்த வகையில், 98 சதவிகிதம் காமெடி என்றால் கடைசி ஒரு 10 நிமிடம் கண்களை கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ் இடம்பெற்றுள்ளது. தியேட்டரை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கனத்த இதயத்துடனேயே வெளியே வருவார்கள் அப்படியொரு நெஞ்சை பிழியும் க்ளைமாக்ஸ் இந்த படத்தில் உள்ளது என்றார்.