‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஆடியோ விழாவுக்கு வரும்போது, அரசியல்வாதிகள் லாரிகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டு வருவது போன்று ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு பெருங்கூட்டத்தையே கூட்டி வந்து விழா அரங்கத்தையே அதிர வைத்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். அப்படி அவர் கூட்டி வந்த கூட்டம், மேடையில் பேசுபவர்கள் பவர்ஸ்டாரின் பெயரை உச்சரித்தாலே கைதட்டி கூச்சல் எழுப்பினர்.
இதைப்பார்த்த சந்தானம், பவர்ஸ்டார் ஒரு லாரி கூட்டத்தை உள்ளே கூட்டி வந்திருக்கிறார். இன்னும் ரெண்டு லாரியில் வந்தவர்கள் வெளியில் நிற்கிறார்கள் என்று சொல்லி, பவரை தர்மசங்கடதிற்கு ஆளாக்கினார். இருப்பினும் அதை பெருசாக எடுத்துக்கொள்ளாத பவர்ஸ்டார், தன்னைப்பார்த்து விசில் அடித்து அமர்க்களம் செய்யும் ரசிகர்களைப்பார்த்து கை அசைத்தபடியே அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில், சமீபகாலமாக அதிகப்படியான ஆட்களை சினிமா நிகழ்ச்சிகளுககு அழைத்து வருவதை தவிர்த்துள்ளார் பவர்ஸ்டார். ஆனபோதும்,. தனக்கு கைதட்டுவதற்காகவாவது சிலர் வேண்டுமே என்பதற்காக, தான் எந்த விழாக்களுக்கு சென்றாலும் தனக்கு முன்பே ஒரு பத்து பதினைந்து பேரை தனது சார்பில் அனுப்பி விடுகிறார். அப்படி வருபவர்கள், பவர்ஸ்டார் விழா அரங்கிற்குள் நுழைந்ததும், ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியாக அவரைப்பார்த்து ரசிகர்கள் போன்று கைதட்டுகிறார்கள். இதனால் மொத்த கூட்டமும் அவர் பக்கம் திரும்ப பரபரப்பு ஏற்படுகிறது.
அதன்பிறகு மற்ற ரசிகர்கள் பவர்ஸ்டாரை கண்டு கொள்ளாதபோதும், அவர் சார்பில் வந்திருக்கும் நபர்கள் மட்டும் பவர்ஸ்டார் பேசும்போது கரகோஷம் எழுப்புகிறார்கள. இது ஒரு பகுதியில் இருந்து மட்டுமே கேட்பதால், இது பவர்ஸ்டாரின் ஆட்கள்தான் என்பதை விழாவுக்கு வந்தவர்கள் யூகித்துக்கொள்கிறார்கள்.