10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
இந்தியத் திரையுலகில் முதல் முறையாக 250 கோடி ரூபாய் செலவில் 'ரண்டமூழம்' என்ற பெயரில் பிரம்மாண்டமான திரைப்படம் தயாராக உள்ளதாக மலையாளத் திரையுலகில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிக்னறன. பிரபல கதாசிரியரான எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து எழுதிய 'ரண்டமூழம்' என்ற நாவலைத்தான் அதே பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளார்களாம். 2011ம் ஆண்டிலிருந்தே இப்படம் பற்றிய பேச்சு செய்திகளில் அடிபட்டு வந்தது. தற்போதுதான் அதற்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
மகாபாரதத்தை பீமனின் பார்வையில் சொல்லியிருக்கும் நாவல்தான் 'ரண்டமூழம்'. படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால், பீஷ்மர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன், அர்ஜுனன் கதாபாத்திரத்தில் விக்ரம், திரௌபதி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா என பல மொழி நடிகர்களையும் படத்தில் நடிக்க வைக்க உள்ளார்களாம்.
இப்படத்தை எம்.டி.வாசுதேவன் நாயருடன் இணைந்து பல படங்களை இயக்கிய ஹரிஹரன் இயக்க உள்ளார் என்றும், பிரபல விளம்பரப் பட இயக்குனர் ஸ்ரீகுமார் இயக்க உள்ளார் என்றும் இரு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இசைக்கு ஏ.ஆர்.ரகுமானைக் கேட்க உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட உள்ளார்களாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்தப் படத்தைப் பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுந்தாலும், இந்த முறை படத்தின் படப்பிடிப்பு உறுதியாக ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.