டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
தனது அப்பா டி.ராஜேந்தரை தொடர்ந்து சிம்புவும் தனது பெயரை மாற்றி வைத்துள்ளார். சிம்பு தனது பெயரை எஸ்டிஆர் என சுருக்கியுள்ளார். தனது தந்தையை டி.ஆர்., என அழைத்தது போல் தன்னையும் ரசிகர்கள் இனி எஸ்டிஆர் என்ற பெயரிலேயே அழைக்குமாறு தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாடு சூட்டிங்கிற்காக விசாவுக்கு விண்ணப்பித்திருந்த சிம்புவிடம், விசா விண்ணப்பத்தில் அவரது முதல் பெயர், நடுப் பெயர் உள்ளட்டவற்றை எழுதுமாறு கூறியிருந்தனர். இதையடுத்து இனிஷியலின் விரிவாக்கத்துடன் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன் என்று எழுதியிருந்தார் சிம்பு. இதைப் பார்த்த விண்ணப்ப அதிகாரி, பெயரைப் பார்த்தால் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல தெரிகிறது. அதனால் பெயரை எஸ்டிஆர் என மாற்றிக்கொள்ளலாமே ஐடியா கொடுத்துள்ளார். எம்ஜிஆர், என்டிஆர்., தன்னையும் சேர்த்து விமான நிலைய அதிகாரி கூறியதால் ஏகத்திற்கும் குஷியாகி போயுள்ளார் சிம்பு. இந்தப் பெயரிலேயே இனி எல்லோரும் அழைக்கட்டும் என உடனடியாக தனது பெயரை எஸ்டிஆர் என மாற்றி உள்ளதாக அறிவித்து விட்டார். அது மட்டுமல்ல விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு சிம்புவின் இமேஜ் பல மடங்கு உயர்ந்துள்ளதால், சமூக சேவை நிறுவனங்கள் பலவும் சிம்புவிடம் உதவி கேட்டு வருகின்றன. அவர்களுடன் இணைந்து நற்காரியங்கள் பலவும் செய்ய சிம்பு திட்டமிட்டுள்ளதாக அவரது நெருங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அதிர்பார்க்கலாம். பெயரை மாற்றியவுடன் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., பாணியில் சமூக சேவையில் இறங்க திட்டமிட்டுள்ளாரோ....!!?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.